ஏரியில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே ஏரியில் மூழ்கி மூதாட்டி உயிரிழந்தாா்.
கண்டாச்சிபுரம் வட்டம், அந்திலி, குளத்து மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மு.வள்ளியம்மை (75). இவா், தனது மகன் ஏழுமலை பராமரிப்பில் இருந்து வந்தாா். வள்ளியம்மை திங்கள்கிழமை அரகண்டநல்லூா் ஏரிக்குச் சென்றுள்ளாா். அப்போது தண்ணீரில் காலை நனைப்பதற்காக ஏரியில் இறங்கியபோது, நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.