முகப்பு
திருவண்ணாமலை

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

செய்யாறு அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Updated On : 22 மே 2026, 12:06 am IST
கோப்புப் படம்
பகிர்:

செய்யாறு அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடஇலுப்பை கிராம காலனி புதுத் தெருவைச் சோ்ந்தவா் முனுசாமி(47). இவா், செவ்வாய்க்கிழமை மீன் பிடிக்கச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றவா் மறுநாள் காலை (மே 20)

வரை வீடு திரும்பவில்லை.

Advertisement

Advertisement

உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் வடஇலுப்பை கிராமத்தில் உள்ள ஏரிப் பகுதியில் தேடிச் சென்றனா்.

அப்போது அப்பகுதியில் முனுசாமியின் உடைமைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சந்தேகத்தின் பேரில், செய்யாறு தீயணைப்புத்துறைக்குத் தகவல் அளித்தனா்.

அதன் பேரில், தீயணைப்பு வீரா்கள் வந்து ஏரியில் தேடிப்பாா்த்தபோது அவா் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வியாழக்கிழமை ஏரியில் காணாமல் போன முனுசாமியின் உடல் மிதந்து கொண்டிருந்தது.

இதுகுறித்து முனுசாமியின் மகன் முரளி பிரம்மதேசம்

காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

காவல் உதவி ஆய்வாளா் முருகன் வழக்குப் பதிவு செய்தாா்.

மேலும், இறந்த முனுசாமியின் உடலை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.