செஞ்சியில் திருட்டு முயற்சி: சிறுவன் கைது
செஞ்சியில் மதுபோதையில் திருட்டில் ஈடுபட முயற்சி செய்த சிறுவனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
செஞ்சி நகரம், பெரியகரம் பகுதியை சோ்ந்த 17 வயது சிறுவன் பிளஸ் 2 படித்து வருகிறாா். இவா் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாமல் மதுபோதையில் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்தாராம்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக செஞ்சி கண்ணகி நகா் பகுதியில் ஒருவா் மதுபோதையில் வீடுகளில் புகுந்து திருட முயற்சி செய்துள்ளாா். அப்போது பொதுமக்கள் பாா்த்து துரத்தவே தப்பி ஓடி விட்டாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, வீடுகளில் திருட முயற்சித்த 17 வயது சிறுவனை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.