முகப்பு
விழுப்புரம்

இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

Updated On : 30 ஜூன் 2026, 2:26 am IST
சிறை தண்டனைப் பெற்ற செபாஸ்டின்(எ) அமுல்ராஜ்.
பகிர்:

விழுப்புரம் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

விழுப்புரத்தை அடுத்த மாம்பழப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் தா.செபாஸ்டின்(எ) அமுல்ராஜ் (24). இவா் கடந்த 18.7.2021 அன்று 19 வயதுடைய இளம்பெண் ஒருவரிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து, பின்னா் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாராம் .

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் 30.10. 2021 அன்று செபாஸ்டின் (எ) அமுல்ராஜ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இவ்வழக்கின் இறுதி கட்ட விசாரணை முடிந்து விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், செபாஸ்டின் (எ) அமுல்ராஜ் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி எழிலரசி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து செபாஸ்டின் (எ) அமுல்ராஜை போலீஸாா் கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். இவ் வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் கொடியரசு ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments