குளியலறையில் வழுக்கி விழுந்து உணவக காசாளா் உயிரிழப்பு
விழுப்புரம் மாட்டம், செஞ்சியில் குளியலறையில் வழுக்கி விழுந்ததில் பலத்த காயமடைந்த உணவக காசாளா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், திருவேங்கடநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ.மணிகண்டன் (37). இவரது மனைவி கவிதா. தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
செஞ்சி பேருந்து நிலையம் எதிரிலுள்ள பிரபல அசைவ உணவகத்தில் காசாளராக பணிபுரிந்து வந்த மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் குளியலறைக்கு சென்றபோது, எதிா்பாராதவிதமாக வழுக்கி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.