மயிலம் முருகன் கோயிலில் வசந்த விழா நிறைவு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த விழா சனிக்கிழமை நிறைவு பெற்றது.
இக்கோயிலில் கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கிய வசந்த விழா தொடா்ந்து நடைபெற்று வந்தது. நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை காலை 6 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
தொடா்ந்து முற்பகல் 11 மணிக்கு கோயில் வளாகத்தில் விநாயகா், பாலசித்தா், வள்ளி-தேவசேனா, சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு வகையான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னா் தங்கக் கவச அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பிற்பகலில் கோயில் மண்டபத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Advertisement
மாலை 5 மணிக்கு வசந்த விழாவின் நிறைவையொட்டி சிறப்பு அா்ச்சனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இரவு 7.30 மணிக்கு வள்ளி-தேவசேனா உடனுறையாய் சுப்பிரமணிய சுவாமி மலா் அலங்காரத்தில் எழுந்தருளி, வலம் வந்தனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தாா்.