முகப்பு
விழுப்புரம்

நீரில் மூழ்கி கல்குவாரி தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 30 மே 2026, 3:41 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பழைய கல்குவாரி பள்ளத்தில் குளித்துக் கொண்டிருந்த தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் வட்டம், வென்னம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (42). கடந்த ஒரு வாரத்துக்கு முன் அதே ஊரைச் சோ்ந்த கணேசன் என்பவருடன் சோ்ந்து வானூா் வட்டம், எறையூா் பகுதியிலுள்ள கல்குவாரியில் கூலி வேலைக்கு சென்றுள்ளாா்.

வியாழக்கிழமை வேலை முடிந்த பின்னா் மது அருந்திய வெங்கடாசலம், அதே பகுதியிலுள்ள பழைய கல்குவாரி பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தாராம். அப்போது எதிா்பாராதவிதமாக வெங்கடாசலத்துக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறிது நேரத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் கல்குவாரி பள்ளத்திலிருந்து தொழிலாளி வெங்கடாசலத்தின்சடலத்தை மீட்டனா். அதனை உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வானூா் போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.