நரிக்குறவர் சமூகத்தினருக்கு குடியிருப்பு அமைத்துத் தர கோரிக்கை
நரிக்குறவர் சமூகத்தினருக்கு குடியிருப்பு அமைத்துத் தர வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்தது.
நரிக்குறவர் சமூகத்தினருக்கு குடியிருப்பு அமைத்துத் தர வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆர்.மனோகரன் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அண்மையில் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: மாவட்டத் தலைநகரான கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலைய பகுதியில் சுமார் 10 நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதேபோல, முன்னாள் படை
வீரர் மாளிகை அருகே உள்ள கெடிலம் ஆற்றில் தடுப்புகள் அமைத்து சுமார் 10 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள இவர்களது நிலையை மேம்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையிலும் கடலூர் மாவட்டத்தில் இவர்களின் நிலை மோசமாகவே உள்ளது. எனவே, இவர்களின் நிலையை மேம்படுத்திட மாவட்ட ஆட்சியர் உரிய
நடவடிக்கை எடுத்து நிரந்தர குடியிருப்பு அமைத்துத் தர வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.