வீட்டில் திருட முயற்சி: இளைஞர் சிக்கினார்
ஓய்வு பெற்ற தீயணைப்புத் துறை அலுவலரின் வீட்டில் திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஓய்வு பெற்ற தீயணைப்புத் துறை அலுவலரின் வீட்டில் திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
கடலூர் உண்ணாமலைசெட்டி சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பூமாலை (60). ஓய்வுபெற்ற தீயணைப்புத் துறை அலுவலர். தற்போது ஆடிமாதம் என்பதால் அந்தப் பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக, சனிக்கிழமை இரவு அந்தப் பகுதியில் திரையிடப்பட்ட சினிமாவை பார்ப்பதற்காக பூமாலை தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
அப்போது, பூமாலை மட்டும் வீட்டுக்குத் திரும்பியபோது வீட்டின் முன்பக்கக் கதவு திறக்கப்பட்டிருந்ததோடு, வீட்டினுள் மர்ம நபர்கள் 3 பேர் நிற்பதைப் பார்த்துள்ளார். பூமாலையைப் பார்த்ததும் அவர்களில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டார்.
இதனைப் பார்த்து பூமாலை கூச்சலிடவே, அந்தப் பகுதி மக்கள் ஓடிவந்து அவரது வீட்டுக்குள் சென்று மாடியில் பதுங்கியிருந்த இளைஞரை பிடித்தனர். அப்போது அந்த இளைஞர் தாக்கப்பட்டார். அவரை
பொதுமக்கள் கடலூர் புதுநகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.