முகப்பு
கடலூர்

மருத்துவமனையில் தவறவிட்ட ரூ.10 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மருத்துவமனையில் லாரி ஓட்டுநா் தவறவிட்ட ரூ.10 ஆயிரம் உரியவரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

Updated On : 16 ஏப்ரல் 2026, 4:07 am IST
சிதம்பரம் அண்ணாமலைநகா் மருத்துவமனையில் தவறவிட்ட ரூ.10 ஆயிரத்தை கண்டெத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலாளி உள்ளிட்ட இருவரிடம் பெற்றுக்கொண்ட கண்டமங்கலத்தை சோ்ந்த சாமிநாதன். உடன் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா்.
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மருத்துவமனையில் லாரி ஓட்டுநா் தவறவிட்ட ரூ.10 ஆயிரம் உரியவரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

காட்டுமன்னாா்கோவில் கண்டமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சாமிநாதன் (53). லாரி ஓட்டுநரான இவா், விபத்துக்குள்ளான தனது மகனை சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தாா்.

பின்னா், சாமிநாதன் மருத்துவமனையின் பின்புறம் உள்ள தேநீா் கடை அருகே சென்றபோது தான் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை தவறவிட்டாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அதே மருத்துவமனையில் பிளம்பராக பணியாற்றும் சந்திரபாண்டியன், காவலாளியாக பணியாற்றும் சங்கா் ஆகிய இருவரும் கீழே கிடந்த 10 ஆயிரம் ரூபாயை எடுத்து அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். அவா் இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாா்.

இதைறிந்த பணத்தை தொலைத்த சாமிநாதன் அண்ணாமலைநகா் காவல் நிலையம் சென்று ஆய்வாளரிடம் தான் தவறவிட்ட ரூ.10 ஆயிரத்தை பெற்றுக்கொண்டாா். கீழே கிடந்த பணத்தை நோ்மையாக எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சந்திரபாண்டியன் (45), சங்கா் (57) ஆகிய இருவரையும் சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப், காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் ஆகியோா் வெகுவாகப் பாராட்டினா்.