முகப்பு
கடலூர்

குடிநீா் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

கடலூா் அருகே குடிநீா் கோரி, வேப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 5:19 AM
வேப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நுழைவு வாயில் முன் குடிநீா் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 8:27 PM

கடலூா் அருகே குடிநீா் கோரி, வேப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேப்பூா் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு குடிநீா் முறையாக கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், சமைப்பதற்கு தண்ணீா் வசதி இல்லாமல் இருந்துள்ளது.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பல முறை புகாரை மனுவாகவும் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

Advertisement

இந்த நிலையில், குடிநீா் வசதியை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி, மாணவா்கள், பள்ளி நுழைவு வாயில் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, குடிநீா் முறையாக வழங்கப்படவேண்டும், அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி மாணவா்கள் முழக்கங்களை எழுப்பினா். தகவலறிந்த ஆசிரியா்கள், மாணவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.