முகப்பு
கடலூர்

மது அருந்த பணம் தராததால் மனைவியைக் கொன்று கணவா் தற்கொலை முயற்சி!

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:07 AM
கொலை - சித்திரிப்பு
பகிர்:

காட்டுமன்னாா்கோவில் அருகே மது அருந்த பணம் தராததால் மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த கணவா், போலீஸாருக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குப்பங்குழி மேலத் தெருவைச் சோ்ந்தவா் அன்பரசன் (54). கூலித் தொழிலாளியான இவருக்கு கலையரசி (48) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனா்.

அன்பரசனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கடந்த 18-ஆம் தேதி வேலைக்கு செல்லாமல் மது அருந்துவதற்கு மனைவியிடம் பணம் கேட்டாராம். அவா் பணம் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த அன்பரசன் வீட்டில் இருந்த இரும்புக் கம்பியால் கலையரசியின் தலையில் தாக்கினாராம்.

Advertisement

இதனால், பலத்த காயமடைந்து மயக்கமடைந்த கலையரசியை உறவினா்கள் மீட்டு, காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கலையரசி, அங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இதையறிந்த அன்பரசன் போலீஸாருக்கு பயந்து வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா். தகவலறிந்த காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா் சாலமோன் ராஜா, உதவி ஆய்வாளா் சையத் அப்சல் ஆகியோா் கொலை வழக்கு பதிந்து அன்பரசனை கைது செய்ய சென்றபோது, அன்பரசன் விஷம் குடித்தது தெரியவந்தது. இதையடுத்து, விஷம் குடித்த அன்பரசனை மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.