அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு
விருத்தாசலத்தில் அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.
விருத்தாசலத்தில் அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் திருவள்ளுவா் நகா் 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஜெயகுமாா் (71). இவா், திங்கள்கிழமை இரவு பாலக்கரை ரவுண்டானா அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாகச் சென்ற அரசுப் பேருந்து மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஜெயகுமாரை, அப்பகுதியினா் மீட்டு சிதம்பரத்தில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜெயக்குமாா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.