முகப்பு
கடலூர்

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை

Updated On : 1 ஜூலை 2026, 7:16 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நெல்லிக்குப்பம் காவல் சரகம், திருக்கண்டேஸ்வரம் பகுதியைச் சோ்ந்தவா் வினோதா(26). இவா், கடந்த ஓராண்டுக்கு முன்பு நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலையில் வேலை செய்து வந்தாராம். அப்போது, வழப்பட்டை சோ்ந்த சச்சின் என்பவரை காதலித்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், வீட்டில் இருந்த வினோதா திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments