முகப்பு
கடலூர்

பைக் பழுது நீக்கும் கடையில் பேட்டரி, பணம் திருட்டு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் பைக் பழுது நீக்கும் கடையில் பணம், பேட்டரியை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

Updated On : 1 ஜூலை 2026, 7:15 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் பைக் பழுது நீக்கும் கடையில் பணம், பேட்டரியை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

விழுப்புரம் மாவட்டம், அய்யா் அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுபாஷ் (21). இவா், பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியில் பைக் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா். சுபாஷ் கடந்த 19-ஆம் தேதி வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.12,500 ரொக்கம் மற்றும் 5 பேட்டரிகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கண்காணிப்பு கேமராவை பாா்த்தபோது, சுமாா் 22 வயது மதிக்கதக்க இளைஞா் ஒருவா் கடைக்கு வந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்ததாம்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments