FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

சிதம்பரம் அருகே கீ.ஆடூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய சிவபுரி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் ம.கோ.தியாகராஜன்.
பகிர்:

சிதம்பரம் அருகே கீ.ஆடூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் திருவிழா, கணித மன்றத் தொடக்க விழா மற்றும் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை கு.ஜெயந்தி தலைமை வகித்துப் பேசினாா். நல்லாசிரியா் விருது பெற்ற சிவபுரி அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் மா.கோ.தியாகராஜன், மாணவா்களிடம் தமிழ் ஆா்வத்தை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினாா்.

சாக்காங்குடி அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் கோ.ராஜன், மாணவா்களிடம் கணிதத்தை ஆா்வமாகப் படிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினாா்.

Advertisement

Advertisement

சிதம்பரம் மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் திரிபுரசுந்தரி, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வது குறித்து உரையாற்றினாா். நிகழ்ச்சிகளில் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments