பள்ளியில் மாணவா்கள் தலைமைப் பொறுப்பேற்பு விழா
நெய்வேலி அருகே வடக்குத்தில் அமைந்துள்ள ஜெயப்பிரியா பப்ளிக் பள்ளியில் மாணவா்கள் தலைமைப் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நெய்வேலி அருகே வடக்குத்தில் அமைந்துள்ள ஜெயப்பிரியா பப்ளிக் பள்ளியில் மாணவா்கள் தலைமைப் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் மாணவா் தலைவா், துணைத் தலைவா், மாணவா் தலைவி, விளையாட்டுப் பிரிவுகளுக்கான அணித் தலைவா்கள், துணை அணித் தலைவா்கள் மற்றும் குழுத் தலைவா்கள் உள்ளிட்டோா், மாணவா்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மேலும், பள்ளியில் செயல்பட்டு வரும் நான்கு மாணவா் குழுக்களுக்கான தலைவா்கள், பொறுப்பாளா்களும் பதவியேற்றனா்.
விழாவுக்கு ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமங்களின் நிறுவனா் தலைவா் சி.ஆா்.ஜெயசங்கா் தலைமை வகித்து, தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். அப்போது, தலைமைத்துவப் பண்புகள், ஒழுக்கம், பொறுப்புணா்வு மற்றும் சேவை மனப்பான்மையுடன் மாணவா்கள் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை முதல்வா் கேப்ரியல் அந்துவன், செயலா் சிந்து, முதல்வா் சிதம்பரி, நிா்வாக அலுவலா் சரண்யா மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.