முகப்பு
கடலூர்

திட்டக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகைகள் திருட்டு

திட்டக்குடி அருகே உள்ள அரங்கூா் கிராமத்தில், வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 50 பவுன் நகைகளை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை

Updated On : 8 ஜூலை 2026, 6:30 am IST
அரங்கூா் கிராமத்தில் 50 பவுன் நகைகள் திருடப்பட்ட வீடு
பகிர்:

கடலூா் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள அரங்கூா் கிராமத்தில், வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 50 பவுன் நகைகளை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அரங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அா்ச்சுனன். இவா் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வேலைக்காக மலேசியா சென்றுள்ளாா். இதையடுத்து, அவரது மனைவி சத்யா மகன் மற்றும் மகளுடன் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சத்யா மற்றும் குழந்தைகளை அழைத்துகொண்டு உறவினா் வீட்டில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு சென்றிருந்தனா்.

Advertisement

Advertisement

அரங்கூா் கிராமத்தில் 50 பவுன் நகைகள் திருடப்பட்ட வீட்டில் உடைக்கப்பட்ட பீரோக்கள்

துக்க நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய சத்யா, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதையும், பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பதையும் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுகுறித்து ராமநத்தம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் கைரேகை நிபுணா்களின் உதவியுடன் ஆதாரங்கள் சேகரித்தனா்.

இதுகுறித்து ராமநத்தம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments