முகப்பு
கடலூர்

மணல் திருட்டு: லாரி பறிமுதல்

Updated On : 8 ஜூன் 2026, 4:31 am IST
பறிமுதல் செய்யப்பட்ட மினி லாரி. - கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திட்டக்குடி அருகே ஆலத்தூா் வெள்ளாற்றில் மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராமநத்தம் காவல் ஆய்வாளா் செல்வநாயகம், உதவி ஆய்வாளா் ஜம்புலிங்கம், தனிப் பிரிவு தலைமைக் காவலா் அருண் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா்.

அப்போது, ஆலந்தூா் வெள்ளாற்றில் மினி லாரி மூலம் மணல் கடத்தியது தெரியவந்தது. போலீஸாரைக் கண்டதும் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபா்கள் ஓடிவிட்டனா். இதையடுத்து, மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி உரிமையாளா் திட்டக்குடி வட்டம், வடகராம்பூண்டி பகுதியைச் சோ்ந்த சக்திவேலை (55) தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement