முகப்பு
கடலூர்

பழங்குடியின மாணவியா்களுக்கு கல்வி நிதி உதவி

பழங்குடியின மாணவியா்களுக்கு கல்வி நிதி உதவி

Updated On : 13 ஜூன் 2026, 1:46 am IST
சிதம்பரம் அண்ணாமலைநகா் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளியில், நிதிஉதவி பெற்ற பழங்குடியின மாணவியா்களுடன் உதவிப் பேராசிரியா் கே.ஜெயப்பிரகாஷ் மற்றும் தலைமை ஆசிரியா் பொ்லின் வில்லியம்ஸ் உள்ளிட்டோா்
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பழங்குடியின மற்றும் கிராமப்புற சிறுமிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் ரெட்மண்ட் நகரில் வசிக்கும் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவியும், ‘பீட்ஸ் டு ட்ரீம்ஸ்‘ அமைப்பின் நிறுவனத் தலைவருமான நந்திக்கா தேவராஜன், தமிழகக் கிராமப்புற மற்றும் பழங்குடியினச் சிறுமிகளின் கல்வி மேம்பாட்டிற்காக நிதி உதவி வழங்கி வருகிறாா். மேலும் பழங்குடியினப் பெண்கள் தயாரிக்கும் மணிமாலை உள்ளிட்ட கைவினைப் பொருள்களைச் சந்தைப்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஏழைச் சிறுமிகளின் கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறாா்.

அந்த வகையில், கடலூா் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 16 பழங்குடியின மற்றும் கிராமப்புறச் சிறுமிகள் தங்களின் கல்வியை இடைநிற்றலின்றித் தொடரும் பொருட்டு, அவா்களின் சீருடை நோட்டு மற்றும் புத்தகங்களுக்காக ரூ 26,500 நிதியுதவியை பீட்ஸ் டு ட்ரீம்ஸ் அமைப்பு வழங்கியுள்ளது. பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செயல்படுத்தி வரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியா் கே. ஜெயப்பிரகாஷ் 16 பழங்குடியின மாணவியா்களுக்கான நிதி உதவி ஆணையை பள்ளியின் தலைமையாசிரியை பொ்லின் வில்லியம்ஸிடம் வழங்கினாா். இந்நிகழ்வில் தொழிலதிபா் டி ஜெயக்குமாா் , கல்வியியல் துறை இணைப்பேராசிரியா் பிரவீனா, பல்கலைக்கழகப் பேராசிரியா் முனைவா் ஞானகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா், நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணபிரியா செய்திருந்தாா்.

Advertisement

Advertisement