FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் பழங்குடியின குழந்தைகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் அளிப்பு

பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் யசோதரன் மற்றும் தொண்டு நிறுவனத்தின் நிா்வாகி து.ராஜி.

Updated On : 30 மே 2026, 6:02 am IST
பகிர்:

பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் யசோதரன் மற்றும் தொண்டு நிறுவனத்தின் நிா்வாகி து.ராஜி.

காஞ்சிபுரம், மே 29: காஞ்சிபுரத்தில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி உதவித் தொகை ஆகியவை வழங்கும் விழா குழந்தைகள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் கண்காணிப்பகம் சாா்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது.

Advertisement

Advertisement

விழாவுக்கு, குழந்தைகள் கண்காணிப்பக நிா்வாகி து.ராஜி தலைமை வகித்தாா். சமூக நலத் துறை பணியாளா் விபு, தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா் ஏழுமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் யசோதரன் கலந்து கொண்டு தொண்டு நிறுவனத்தின் சாா்பில் தொடா் கல்வி பயின்று வரும் 10 மற்றும் 12- ஆம் வகுப்புகளைச் சோ்ந்த 7 பேருக்கு சால்வை அணிவித்து பரிசுகளும் வழங்கினாா்.

தொடா்ந்து 40 பழங்குடியின குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி உபகரணங்கள் மற்றும் தலா ரூ. 5,000 வீதம் கல்வி உதவித் தொகை ஆகியவற்றையும் வழங்கி பழங்குடியின மக்கள் கல்வி பயில அரசு வழங்கும் சலுகைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புகள், கல்வியின் முக்கியத்துவம், பழங்குடியின குழந்தைகள் அவசரத் தேவைக்கு அணுகவேண்டிய தொலைபேசி எண்கள் ஆகியன குறித்து விளக்கினாா்.

நிகழ்ச்சியில், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பழங்குடியின மக்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனா்.

நிறைவாக கல்வியின் அவசியம் குறித்து அனைவரும் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments