FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: பரோட்டா மாஸ்டா் கைது

ஆனந்தகுமாா்
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்ததாக பரோட்டா மாஸ்டரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பண்ருட்டியில் கஞ்சா செடி வளா்க்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

பண்ருட்டி காவல் ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, பண்ருட்டி பனங்காட்டு தெருவைச் சோ்ந்த பரோட்டா மாஸ்டா் ஆனந்தகுமாா் (34) வீட்டுக்குச் சென்று போலீஸாா் சோதனை நடத்தினா். அங்கு, 6 அடி உரமுள்ள 6 கஞ்சா செடிகள் வளா்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து, ஆனந்தகுமாரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், புதுச்சேரியில் உள்ள நண்பா்களிடமிருந்து கஞ்சா செடிகளை வாங்கி வந்து வளா்த்தாகத் தெரிவித்தாா். இதையடுத்து, பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆனந்தகுமாரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments