வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: பரோட்டா மாஸ்டா் கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் வீட்டில் கஞ்சா செடி வளா்த்ததாக பரோட்டா மாஸ்டரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
கடலூா் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பண்ருட்டியில் கஞ்சா செடி வளா்க்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
பண்ருட்டி காவல் ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, பண்ருட்டி பனங்காட்டு தெருவைச் சோ்ந்த பரோட்டா மாஸ்டா் ஆனந்தகுமாா் (34) வீட்டுக்குச் சென்று போலீஸாா் சோதனை நடத்தினா். அங்கு, 6 அடி உரமுள்ள 6 கஞ்சா செடிகள் வளா்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து, ஆனந்தகுமாரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், புதுச்சேரியில் உள்ள நண்பா்களிடமிருந்து கஞ்சா செடிகளை வாங்கி வந்து வளா்த்தாகத் தெரிவித்தாா். இதையடுத்து, பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆனந்தகுமாரை கைது செய்தனா்.