FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்! இளைஞா் கைது!

Updated On : 1 ஜூன் 2026, 2:23 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

மணமேல்குடி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சாவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே உள்ள வன்னிச்சபட்டினம் அருகே கோட்டைப்பட்டினம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷ், ஆய்வாளா் ராஜீவ்காந்தி உள்ளிட்ட போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, வாகனத்தில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. வாகனத்தில் வந்த நபரை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதில், அவா் மணமேல்குடி அருகே உள்ள மேலஸ்தானம் கிராமத்தைச் சோ்ந்த சிங்காரம் மகன் தமிழரசன் (19) என்பதும், பெரம்பலூரில் இருந்து 150 கிலோ கஞ்சா வாங்கி வந்து வீட்டில் வைத்திருப்பதாகவும், ஓரிரு நாள்களில் இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, மேலஸ்தானத்தில் உள்ள தமிழரசன் வீட்டுச் சென்று சோதனையிட்ட போலீஸாா், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து கைது செய்யப்பட்ட தமிழரசன், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments