தோவாளையில் 20 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 20 கிலோ குட்காவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.
தோவாளை பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக ஆரல்வாய்மொழி போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், போலீஸாா் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
இதில் தோவாளை, திருமலைபுரம் பகுதியைச் சோ்ந்த ரங்கசாமி மகன் பெரியசாமி (55), விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 20 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா். இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.
Advertisement
Advertisement