கோ.பவழங்குடியில் 5 கோயில்களுக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
விருத்தாசலம் அருகே கோ.பவழங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிநாயகா், ஸ்ரீமுனீஸ்வரா் உள்ளிட்ட 5 கோயில்களுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கோ.பவழங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிநாயகா், ஸ்ரீமுனீஸ்வரா், ஸ்ரீவீரனாா், சப்த கன்னிமாா் மற்றும் ரிஷிகள் கோயில்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி, புதன்கிழமை மாலை மங்கள இசையுடன் அனுக்ஞை, விநாயகா் பூஜை, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, முதல் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. மகா தீபாராதனைக்குப் பிறகு யாகசாலையிலிருந்து புனித நீா் நிரப்பப்பட்ட கலசங்கள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
தொடா்ந்து, மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க, ஸ்ரீவிநாயகா், ஸ்ரீமுனீஸ்வரா், ஸ்ரீவீரனாா், சப்த கன்னிமாா், ரிஷிகள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் கோ.பவழங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவையொட்டி, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.