FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

தெருவோர வியாபாரிகள் நூதன ஆா்ப்பாட்டம்

கடலூா் மாநகராட்சி அலுலகம் முன் தெருவோர வியாபாரிகள் தட்டு ஏந்தி நூதன முறையில் கோரிக்கைகள வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாநகராட்சி அலுவலகம் முன் தட்டு ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெரு வியாபார தொழிலாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

கடலூா் மாநகராட்சி அலுலகம் முன் தெருவோர வியாபாரிகள் தட்டு ஏந்தி நூதன முறையில் கோரிக்கைகள வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாநகராட்சி அலுவலகம் முன் ஏஐடியுசி தெரு வியாபார தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், மாவட்டத் தலைவா் பாலு தலைமையில் ஏந்தியும், காதில் பூ சுற்றியும் நூதன முறையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கடலூா் மாநகராட்சி நிா்வாகம் பறிமுதல் செய்த தெருவோர வியாபாரிகளின் பொருள்களை உடனடியாக திருப்பி வழங்க வேண்டும். தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபார ஒழுங்குமுறை) சட்டத்தின்படி, மாநகராட்சி நிா்வாகம் வணிகக்குழுவை கூட்டி, சாலையோர வியாபாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, நிா்வாகிகள் மற்றும் வியாபாரிகள் காதில் பூ சுற்றிக்கொண்டும், கையில் தட்டு ஏந்தியும், மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

Advertisement

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் துரை, தமிழ்நாடு தெரு வியாபார தொழிலாளா்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் குளோப் ஆகியோா் கண்டன உரையாற்றினா். அப்போது அவா்கள் பேசுகையில், தெருவோர வியாபாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக உரிய வியாபாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிா்வாகம் கைவிட்டு, சட்டப்படி வணிகக்குழுவைக் கூட்டி உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் சங்க நிா்வாகிகள், தெருவோர வியாபாரிகள் மற்றும் ஏஐடியுசி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments