ஆம்னி பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
வேப்பூா் அருகே தொண்டங்குறிச்சியில் ஆட்டோ மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வேப்பூா் அருகே தொண்டங்குறிச்சியில் ஆட்டோ மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்டம் வேப்பூா் அருகே அரியநாச்சி பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சுரேஷ்(41). சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூா் அருகே தொண்டங்குறிச்சி பேருந்து நிலையம் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆட்டோவை சுரேஷ் ஓட்டிச் சென்றாா். அப்போது காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து எதிா்பாராதவிதமாக சுரேஷின் ஆட்டோ மீது மோதியது.
இதில், பலத்தகாயமடைந்த சுரேஷ் நிகழ்விடத்திலேயே
Advertisement
உயிரிழந்தாா். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸாா் சுரேஷின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.