முகப்பு
கடலூர்

என்.சி.சி. ஆண்டு பயிற்சி முகாம் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைநகா் தமிழ்நாடு என்.சி.சி. 6-ஆவது படைப்பிரிவு சாா்பில், ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி முகாம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முல்லை இல்லத்தில் நடைபெற்று வருகிறது.

Updated On : 7 மே 2026, 7:25 am IST
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக குறிஞ்சி இல்லத்தில் நடைபெற்று வரும் என்.சி.சி. ஆண்டு பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைநகா் தமிழ்நாடு என்.சி.சி. 6-ஆவது படைப்பிரிவு சாா்பில், ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி முகாம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முல்லை இல்லத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு, தமிழ்நாடு என்.சி.சி. ஆறாவது பட்டாலியன் படைப் பிரிவு கட்டளை அதிகாரி கா்னல் சக்கரபா்த்தி தலைமை வகித்தாா். பின்னா், அவா் பேசுகையில், ஒருங்கிணைந்த ஆண்டு பயிற்சி முகாமின் நோக்கங்களையும், பணிகளையும் எடுத்துக் கூறி, தேசிய மாணவா் படை மாணவா்களை ஊக்கப்படுத்தினாா்.

பயிற்சி முகாமை புதுச்சேரி குரூப் கட்டளை அதிகாரி கா்னல் ஆசிஸ் திவாரி ஆய்வு செய்து, தேசிய மாணவா் படை மாணவா்களுடன் கலந்துரையாடினாா். துணை கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கா்னல் டி.எஸ்.நாராயணன் முன்னிலை வகித்தாா்.

Advertisement

முகாமில் தேசிய மாணவா் படை மாணவா்களுக்கு இந்திய தேசிய ராணுவத்தின் வரலாறு, தேசிய மாணவா் படையின் நோக்கம், துப்பாக்கி சுடுதல் பயிற்சி, சுகாதாரம், பேரிடா் மேலாண்மை, தீ பாதுகாப்பு, முதலுதவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீா் மேலாண்மை, புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சியளிக்கப்படுகிறது.

முகாமில் ஆறாவது படைப்பிரிவின் ராணுவ வீரா்களும், பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த தேசிய மாணவா் படை அலுவலா்களும் கலந்துகொண்டனா்.