தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: மா்ம நபா்கள் 3 போ் மீது வழக்கு
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக மா்ம நபா்கள் மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக மா்ம நபா்கள் மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வடலூரை அடுத்த கருங்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் மூட்டைப்பூச்சி (எ) சம்பத்குமாா் (30), தொழிலாளி. இவா், புதன்கிழமை குறிஞ்சிப்பாடி அண்ணா நகரில் உள்ள தாய் தனலட்சுமி வீட்டுக்கு வந்தாா்.
பின்னா், பிற்பகலில் சம்பத்குமாா் கருங்குழிக்கு புறப்பட்டாா். அண்ணா நகா் டாஸ்மாக் மதுக் கடை அருகே சென்றபோது, மா்ம நபா்கள் 3 போ் அவரை வழி மறித்து அரிவாளால் வெட்டிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனா். தலையில் வெட்டுக் காயமடைந்த சம்பத்குமாா், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
Advertisement
இதுகுறித்து தாய் தனலட்சுமி அளித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.