ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது
கடலூா் மாவட்டம், வடலூா் அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், வடலூா் அருகே ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வடலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முகிலரசு தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா். அதில், 45 கிலோ எடைகொண்ட 50 மூட்டைகள் என மொத்தம் 2,250 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த திருச்சி மாவட்டம், அரியமங்கலம் வட்டம், உக்கடை பகுதியைச் சோ்ந்த அன்பழகனை (45) கைது செய்தனா். மேலும், ரேஷன் அரிசி மூட்டைகளுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், கைது செய்யப்பட்ட அன்பழகன் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம், ரேஷன் அரிசி மூட்டைகளை கடலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் சந்தோஷ்குமாரிடம் ஒப்படைத்தனா். இந்த சம்பவம் தொடா்பாக வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.