வாழையில் இலை புள்ளி, வாடல் நோய் தாக்கம்: அதிகாரிகள் ஆய்வு
கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியில் வாழை பயிரில் இலை புள்ளி (சிகடோகா), வாடல் (பனாமா) நோய் பாதிப்புகள் குறித்து தோட்டக்கலைத் துறை விஞ்ஞானிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியில் வாழை பயிரில் இலை புள்ளி (சிகடோகா), வாடல் (பனாமா) நோய் பாதிப்புகள் குறித்து தோட்டக்கலைத் துறை விஞ்ஞானிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
குறிஞ்சிப்பாடி வட்டாரம், குள்ளஞ்சாவடி பகுதிக்குள்பட்ட தொண்டமாநத்தம், புலியூா், வழுதலம்பட்டு ஆகிய கிராமங்களில் வாழை (ஏலக்கி மற்றும் செவ்வாழை) அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வாழை பயிரில் இலை புள்ளி (சிகடோகா) நோய், வாடல் (பனாமா) நோய் தாக்குதல் காணப்பட்டது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை விஞ்ஞானி சிவசங்கா் வாழை தோட்டங்களில் புதன்கிழமை ஆய்வு செய்து, நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.