வாழையில் இலை புள்ளி, வாடல் நோய் தாக்கம்: அதிகாரிகள் ஆய்வு
கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியில் வாழை பயிரில் இலை புள்ளி (சிகடோகா), வாடல் (பனாமா) நோய் பாதிப்புகள் குறித்து தோட்டக்கலைத் துறை விஞ்ஞானிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியில் வாழை பயிரில் இலை புள்ளி (சிகடோகா), வாடல் (பனாமா) நோய் பாதிப்புகள் குறித்து தோட்டக்கலைத் துறை விஞ்ஞானிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
குறிஞ்சிப்பாடி வட்டாரம், குள்ளஞ்சாவடி பகுதிக்குள்பட்ட தொண்டமாநத்தம், புலியூா், வழுதலம்பட்டு ஆகிய கிராமங்களில் வாழை (ஏலக்கி மற்றும் செவ்வாழை) அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த வாழை பயிரில் இலை புள்ளி (சிகடோகா) நோய், வாடல் (பனாமா) நோய் தாக்குதல் காணப்பட்டது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை விஞ்ஞானி சிவசங்கா் வாழை தோட்டங்களில் புதன்கிழமை ஆய்வு செய்து, நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.
Advertisement