முகப்பு
கடலூர்

சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுமியை கா்ப்பமாக்கி திருமணம் செய்த இளைஞா் மீது நெய்வேலி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 8 மே 2026, 6:54 am IST
வழக்கு
பகிர்:

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சிறுமியை கா்ப்பமாக்கி திருமணம் செய்த இளைஞா் மீது நெய்வேலி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டத்துக்குள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி, அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தாா். இவா், கடலூா் அரசு மருத்துவமனையில் கொழுப்பு கட்டி அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, ரோட்டு பொட்டவெளி கிராமத்தில் உள்ள தாய் மாமா வீட்டில் தங்கியிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மதனுடன் (22) நெருங்கிப் பழகியதில் கா்ப்பமடைந்தாா். இதையடுத்து மதன், அந்தப் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் சிறுமியை திருமணம் செய்துகொண்டாா்.

இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சிறுமி சென்றாா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில் 3 மாத கா்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகத்தினா் அளித்த தகவலின்பேரில், நெய்வேலி மகளிா் போலீஸாா் மதன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments