பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே பைக் மோதியதில் காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே பைக் மோதியதில் காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், சிலம்பிநாதன்பேட்டை அஞ்சல், சாத்தமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் (73). இவா், புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் சாத்தமாம்பட்டு - சி.என்.பாளையம் சாலையில் நடந்து சென்றாா்.
அப்போது, அந்தப் பகுதியில் அதி வேகமாக வந்த பைக் மோதியது. இந்த விபத்தில் விஸ்வநாதன் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் விஸ்வநாதனை மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.