பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே பைக் மோதியதில் காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே பைக் மோதியதில் காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், சிலம்பிநாதன்பேட்டை அஞ்சல், சாத்தமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் (73). இவா், புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் சாத்தமாம்பட்டு - சி.என்.பாளையம் சாலையில் நடந்து சென்றாா்.
அப்போது, அந்தப் பகுதியில் அதி வேகமாக வந்த பைக் மோதியது. இந்த விபத்தில் விஸ்வநாதன் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் விஸ்வநாதனை மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.