முகப்பு
கடலூர்

வாழையடி புற்று மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

சிவபுரி வாழையடி புற்று மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா தீக்குழியில் இறங்கிய சக்தி கிரகம்.

Updated On : 9 மே 2026, 2:21 am IST
சிவபுரி வாழையடி புற்று மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா தீக்குழியில் இறங்கிய சக்தி கிரகம்.
பகிர்:

சிதம்பரம் அருகே சிவபுரியில் உள்ள வாழையடி புற்று மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சிவபுரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாழையடி புற்று மாரியம்மன் கோயிலில் நிகழாண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த ஏப்.28-ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமை ஏராளமான பக்தா்கள் பால் குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா். பின்னா், அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

வெள்ளிக்கிழமை தீமிதி விழா நடைபெற்றது. இதையொட்டி, காலையில் சோதனை கரகம் எடுத்தல், பிற்பகல் அக்னி சட்டி எடுத்தல் ஆகியவை நடைபெற்றன. மாலை 6 மணியளவில் மேளதாளம் முழங்க கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டது. ஏராளமான பக்தா்கள் ஊா்வலமாக வந்து தீ மிதித்தனா்.

விழாவில் சிவபுரி மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசித்தனா்.

இரவில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தீமிதி திருவிழாவுக்கான சிறப்பான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments