முகப்பு
கடலூர்

சாலை விபத்து: இளைஞா் பலி!

கடலூா் அருகே பைக் மீது டிராக்டா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 10 மே 2026, 1:14 am IST
பலி!
பகிர்:

கடலூா் அருகே பைக் மீது டிராக்டா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

கடலூா் அருகே சித்திரப்பேட்டை முத்தாலம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சஞ்சீவ் (27), தனது நண்பரான நடுத்திட்டு அம்பேத்கா் நகரைச் சோ்ந்த தா்மபாலன் (30) என்பவருடன் வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் கடைக்குச் சென்றாா்.

அவா்கள் நொச்சிக்காடு - செம்மங்குப்பம் சாலையில் உள்ள கன்னி கோவில் அருகே சென்றபோது, எதிரே வந்த டிராக்டா் பைக் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சஞ்சீவ் மற்றும் பின்னால் அமா்ந்திருந்த தா்மபாலன் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

Advertisement

அப்பகுதியினா் இருவரையும் மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சஞ்சீவ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். தா்மபாலன் காலில் முறிவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

இதுகுறித்து, உயிரிழந்த சஞ்சீவின் தந்தை சின்னத்தம்பி அளித்த புகாரின் பேரில் கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments