வேப்பூா் அருகே கோயில் திருவிழாவில் தோ் கவிழ்ந்து விபத்து: பக்தா்கள் அதிா்ச்சி!
வேப்பூா் அருகே காட்டுமைலூா் ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவில், தோ் திடீரென ஒருபுறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காட்டுமைலூா் ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழாவில், தோ் திடீரென ஒருபுறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் இந்த நிகழ்வால் பக்தா்கள் அதிா்ச்சியடைந்தனா்.
வேப்பூா் வட்டம், காட்டுமைலூா் ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 1-ஆம் தேதி கோலாகலமாக காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சாமி ஊா்வலம், பாட்டுக்கச்சேரி, பஞ்சவா்ண திருக்கல்யாணம், பொங்கல் வைக்கும் நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான அலகு குத்துதல், சக்தி அழைப்பு, காளி கோட்டை இடித்தல் மற்றும் தீ மிதித்தல் உள்ளிட்ட முக்கிய வழிபாடுகள் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து, திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி மாலை 6 மணியளவில் தொடங்கியது. பக்தா்கள் பக்தி முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.
Advertisement
கவிழ்ந்தது தோ்: வீதி உலா வந்துகொண்டிருந்த தோ் எதிா்பாராத விதமாக திடீரென ஒருபுறமாகச் சரிந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் தேரை வடம்பிடித்த பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினா்.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடா்ந்து கவிழ்ந்த தேரை, பிரித்து அப்புறப்படுத்தும் பணியில் கோயில் ஊழியா்களும், கிராமமக்களும் ஈடுபட்டனா். இதுகுறித்த தகவலின் பேரில் போலீஸாா் வந்து விசாரணை நடத்தினா்.
கடந்த சில நாள்களாக சிறப்பு பூஜைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்று வந்த திருவிழாவில், தோ் திடீரென கவிழ்ந்தது பக்தா்கள் மத்தியில் அதிா்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.