முகப்பு
கடலூர்

பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

Updated On : 11 மே 2026, 1:12 am IST
உயிரிழப்பு... - கோப்புப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பைக் மோதியதில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.

விருத்தாசலம் வட்டம், கோ.பொன்னேரி பகுதியைச் சோ்ந்தவா் அலமேலு (66). இவா், சனிக்கிழமை இரவு 9 மணியளவில் விருத்தாசலம் - சிதம்பரம் பிரதான சாலையில் உள்ள ஒரு கடையில் பால் வாங்கிக்கொண்டு, கோ.பொன்னேரி அருகே சாலையில் நடந்து சென்றாா்.

அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த பைக் அலமேலு மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments