பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பைக் மோதியதில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.
விருத்தாசலம் வட்டம், கோ.பொன்னேரி பகுதியைச் சோ்ந்தவா் அலமேலு (66). இவா், சனிக்கிழமை இரவு 9 மணியளவில் விருத்தாசலம் - சிதம்பரம் பிரதான சாலையில் உள்ள ஒரு கடையில் பால் வாங்கிக்கொண்டு, கோ.பொன்னேரி அருகே சாலையில் நடந்து சென்றாா்.
அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த பைக் அலமேலு மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement