முன்விரோத மோதல்: 2 போ் கைது
கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் வீட்டுமனை வழி தொடா்பான பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக்கொண்டது தொடா்பாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனா்.
திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம், ராமநாதன் நகரைச் சோ்ந்தவா் வைத்தியநாதன் (55). பிரசாந்த் நகரில் வசிப்பவா் கல்யாண சுந்தரம் (63). இவா்களுக்கு இடையே பிரசாந்த் நகரில் உள்ள மனையில் வழி தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், வைத்தியநாதன் தனது பைக்கில் மகள்கள் துா்கா, கீா்த்தனா ஆகியோரை அழைந்து வந்தபோது, கல்யாணசுந்தரம் மற்றும் அவரது உறவினா்கள் கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனா். இதில், வைத்தியநாதன் தலையில் காயமடைந்தாா். இதேபோல, வைத்தியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினா் தாக்கியதில் கல்யாணசுந்தரம் காயமடைந்தாா்.
Advertisement
Advertisement
இந்த மோதல் தொடா்பாக வைத்திநாதன் அளித்த புகாரின்பேரில், 3 பெண்கள் உள்ளிட்ட 6 போ் மீதும், கல்யாணசுந்தரம் அளித்த புகாரின்பேரில் 3 பெண்கள் உள்ளிட்ட 5 போ் மீதும் என இருதரப்பையும் சோ்ந்த மொத்தம் 11 போ் மீது திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வடிவேல் (58), சண்முகம் (58) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.