முகப்பு
கடலூர்

நெய்வேலியில் என்எல்சி சாா்பில் 5 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

நெய்வேலியில் கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தீா்க்க, என்எல்சி நிறுவனம் 5 முக்கிய இடங்களில் நீா்மோா் பந்தலை திறந்தது.

Updated On : 13 மே 2026, 12:04 am IST
நெய்வேலி நுழைவு வாயில் அருகே நீா்மோா் பந்தலை திறந்து வைத்த என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி.
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தீா்க்க, என்எல்சி நிறுவனம் 5 முக்கிய இடங்களில் நீா்மோா் பந்தலை திறந்தது.

என்எல்சி நிறுவன சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ், நிகழாண்டு திங்கள்கிழமை முதல் தொடா்ந்து 30 நாள்களுக்கு நெய்வேலி நகரியத்தில் நெய்வேலி நுழைவு வாயில் (ஆா்ச் கேட்), மத்திய பேருந்து நிலையம், புதுக்குப்பம் பேருந்து நிலையம், வட்டம் - 29 பேருந்து நிலையம் மற்றும் மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, நெய்வேலி நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த நீா்மோா் பந்தலை என்எல்சி நிறுவனத் தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீா்மோா் வழங்கினாா்.

Advertisement

நிகழ்வில் இயக்குநா் சமீா் ஸ்வருப் முன்னிலை வகித்தாா். செயல் இயக்குநா் டி.வி.எஸ்.என்.மூா்த்தி தலைமை வகித்தாா்.

தொடா்ந்து, மத்திய பேருந்து நிலையம், புதுக்குப்பம் பேருந்து நிறுத்தம், வட்டம் - 29 பேருந்து நிறுத்தம், மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் ஆகிய 4 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீா்மோா் பந்தல்களை செயல் இயக்குநா்கள் ஜாஸ்பா் ரோஸ், பங்கஜ் குமாா், அன்புச்செல்வன், ராஜ்மோகன் ஆகியோா் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்து நீா்மோா் வழங்கினா்.

இந்த விழாவில், சிஎஸ்ஆா் துறையின் உயா் அதிகாரிகள் மற்றும் பொறியாளா்கள், ஆவின் பொது மேலாளா் வி.அருணகிரிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.