மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி : கடலூா் காவல்துறை அணி முதலிடம்
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் கடலூா் மாவட்ட காவல்துறையை சோ்ந்த அணி முதலிடம் பெற்று கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசை வென்றது.
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் கடலூா் மாவட்ட காவல்துறையை சோ்ந்த அணி முதலிடம் பெற்று கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசை வென்றது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த மே 10-ஆம் தேதி மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் கடலூா் மாவட்ட காவல்துறையைச் சோ்ந்த தலைமை காவலா் நீலமணி மற்றும் ஆயுதப்படை காவலா் பிரவீன்தாஸ் தலைமையிலான அணி பங்கேற்றது. போட்டியில் சிறப்பாக விளையாடிய கடலூா் காவல்துறை அணி முதலிடம் பெற்று கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசை வென்றது.
வெற்றி பெற்ற அணியினரை கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் அப்பண்டராஜ் மற்றும் கயிறு இழுக்கும் அணி பயிற்சியாளா் ரமேஷ் உடனிருந்தனா்.
Advertisement