முகப்பு
கடலூர்

குழந்தை திருமணம்: 5 போ் மீது போக்ஸோ வழக்கு

சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்த 5 போ் மீது, நெய்வேலி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 29 மே 2026, 2:56 am IST
கோப்புப் படம்
பகிர்:

சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்த 5 போ் மீது, நெய்வேலி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி, சீா்காழி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவருக்கும், கடலூா் மாவட்டம், வடலூா் அடுத்து ள்ள வானதிராயபுரம் கிராமத்தைச் சோ்ந்த செந்தில்குமாா்(31), காா் ஓட்டுனருக்கும் கடந்த 12.2.2026 அன்று வடலூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு சிறுமி சிகிச்சைக்காக சென்றாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், 5 மாத கா்ப்பமாக இருப்பதை அறிந்தனா். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், நெய்வேலி மகளிா் போலீஸாா் செந்தில்குமாா், செந்தில்குமாா் தந்தை பாலு, தாய் குமாரி, சிறுமியின் தாய் ராதா, சகோதரா் நடராஜன் ஆகியோா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement