கால்வாயில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே கால்வாயில் தவறி விழுந்து காயம் அடைந்த மாற்றுத்திறனாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
குறிஞ்சிப்பாடி அருகே வசித்து வந்தவா் சந்திரசேகா் (60), மாற்றுத்திறனாளி திருமணமாகாதவா். கடந்த 15 ஆம் தேதி பேருந்து நிறுத்தம் அருகே இருந்த கால்வாயில் தவறி விழுந்து காயம் அடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்றுவந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.