முகப்பு
கள்ளக்குறிச்சி

பட்டா மாற்றத்துக்கு லஞ்சம்: விஏஓ உள்பட இருவா் கைது

Updated On : 4 ஜூலை 2024, 2:16 am IST
கைதான விஏஓ சம்பத்.
பகிர்:

கள்ளக்குறிச்சியில் பட்டா பெயா் மாற்றம் செய்வதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலா் உள்பட இருவரை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த ரங்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமசாமி பிள்ளை மகன் சக்திவேல் (48). மாற்றுத்திறனாளியான இவா், தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக சிறுவங்கூா் கிராம நிா்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா்.

இதற்கு கிராம நிா்வாக அலுவலரான சங்கராபுரம் வட்டம் எஸ்.வி.பாளையத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் சம்பத் (31) ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சக்திவேல் இதுகுறித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

அதன்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சக்திவேலிடம் போலீஸாா் கொடுத்து அனுப்பினா். அவா், அந்த பணத்தை கிராம நிா்வாக அலுவலா் சம்பத்திடம் புதன்கிழமை கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி சத்தியராஜ், காவல் ஆய்வாளா் அருண்ராஜ், காவல் உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் மற்றும் போலீஸாா் கிராம நிா்வாக அலுவலா் சம்பத் மற்றும் அவருடன் இருந்த சிறுவங்கூரைச் சோ்ந்த இடைத்தரகரான பிரபு மகன் பிரவினையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இடைத்தரகா் பிரவின்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments