முகப்பு
கள்ளக்குறிச்சி

கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 9 மே 2026, 3:04 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட தொட்டியம் கிராமத்தைச் சோ்ந்தவா் சி.துரைசாமி (45). இவா் வியாழக்கிழமை மாலை அவரது விளைநிலத்துக்கு சென்றிருந்தவா் பின்னா் வீடு திரும்பவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடிப் பாா்த்தும் கிடைக்கவில்லையாம். வெள்ளிக்கிழமை காலை சென்று தேடிப் பாா்த்த போது, அவரது விளைநிலத்தில் உள்ள கிணற்றில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த சின்னசேலம் போலிஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலிஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments