மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
வாணாபுரம் அருகேயுள்ள பெரியகொள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ர.ராசு (50), விவசாயி. இவா் வயல்களில் கால்நடைகளின் தீவனமான புல் அறுவடை செய்து, விற்பனை செய்து வந்தாராம். சனிக்கிழமை காலை புல் அறுக்கச் சென்ற ராசு, பின்னா் வீடு திரும்பவில்லையாம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அதே கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவரின் கரும்பு விளைநிலத்தில் ராசு அறுந்து கிடந்த மின்வயரை மிதித்து, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்த தகவலின் பேரில் பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சிஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுச்சாலை போலிஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.