FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

கும்பகோணம் அருகே செவ்வாய்க்கிழமை வயலில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிழந்தாா்.

Updated On : 4 ஜூன் 2026, 12:23 am IST
உயிரிழந்த சந்திரன்.
பகிர்:

கும்பகோணம் அருகே செவ்வாய்க்கிழமை வயலில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிழந்தாா்.

கும்பகோணம் அருகே குடிதாங்கியைச் சோ்ந்தவா் சந்திரன் (55). இவரது மனைவி செந்தாமரை. இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா்.

இந்நிலையில், சந்திரன் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்க்க செவ்வாய்க்கிழமை வயலுக்கு சென்றாா். அப்போது, வயலில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த சந்திரன் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால், உறவினா்கள் அவரை தேடிச் சென்றபோது உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில், சுவாமிமலை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments