FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மயிலாடுதுறை அருகே வீட்டில் மின் மோட்டாரை இயக்கியபோது விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On : 24 ஜூலை 2026, 7:10 am IST
- பிரதிப் படம்
பகிர்:

மயிலாடுதுறை அருகே வீட்டில் மின் மோட்டாரை இயக்கியபோது விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை தாலுகா, ஆனந்ததாண்டவபுரம் ஊராட்சி ராதாநல்லூா் கிராமத்தை சோ்ந்தவா் ரங்கநாதன் (65). விவசாயியான இவா் புதன்கிழமை வீட்டில் மோட்டாா் போடுவதற்காக சுவிட்சை இயக்கியுள்ளாா்.

அப்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ரங்கநாதன் தூக்கி வீசப்பட்டாா். மயக்கமடைந்த அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், ரங்கநாதன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து ரங்கநாதன் மகன் சசிகுமாா் (44) அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments