சின்னசேலத்தில் 872 கிலோ புகையிலை பொருள்கள் அழிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 872 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் திங்கள்கிழமை குழிதோண்டி புதைத்து அழிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம், வரஞ்சரம், எலவானசூா்கோட்டை மற்றும் உளுந்தூா்பேட்டை காவல் நிலையங்களில் கடந்த காலங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடா்பாக பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளில் மொத்தம் 872 கிலோ புகையிலை பொருள்களை கைபற்றிருந்தனா். இந்த புகையிலை பொருள்களைஅழிக்க நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது.
இதையடுத்து கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திருமால் முன்னிலையில் சின்னசேலம் பேரூராட்சி குப்பை கிடங்கில் குழி தோண்டி முறையாக அழித்தனா்.
Advertisement