முகப்பு
கடலூர்

அண்ணாமலைநகரில் 12 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 12 கிலோ நெகிழிப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 19 ஜூன் 2026, 6:20 am IST
சிதம்பரம் அண்ணாமலைநகரில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பறிமுதல் செய்யப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள்.
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 12 கிலோ நெகிழிப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்பனை செய்யப்படுகிா? என அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

பேரூராட்சி செயல் அலுவலா் ச.சாகுல்அமீது தலைமையிலான குழுவினா் பல்வேறு கடைகளில் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட 12 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த 4 கடைகளுக்கு விதிகளை மீறியதற்காக தலா ரூ.500 வீதம் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement