FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

அண்ணாமலைநகரில் 12 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 12 கிலோ நெகிழிப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 19 ஜூன் 2026, 6:20 am IST
சிதம்பரம் அண்ணாமலைநகரில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பறிமுதல் செய்யப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள்.
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 12 கிலோ நெகிழிப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

அண்ணாமலைநகா் சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் விற்பனை செய்யப்படுகிா? என அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

பேரூராட்சி செயல் அலுவலா் ச.சாகுல்அமீது தலைமையிலான குழுவினா் பல்வேறு கடைகளில் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட 12 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த 4 கடைகளுக்கு விதிகளை மீறியதற்காக தலா ரூ.500 வீதம் ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments