முகப்பு
கள்ளக்குறிச்சி

இரு பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

Updated On : 31 மே 2026, 1:32 am IST
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு இளைஞா் காயமடைந்தாா்.

சங்கராபுரம் அருகேயுள்ள சித்தேரி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் வீ. சுமன் (26) (படம்). இவா் சேலம் மாவட்டம், தலைவாசலில் புத்தகக் கடை வைத்து நடத்தி வந்தாா். இந்நிலையில், சுமன் வெள்ளிக்கிழமை இரவு வியாபாரம் முடித்து பைக்கில் ஊருக்கு திரும்பியுள்ளாா்.

சங்கராபுரம் ஆற்றுப்பாலம் அருகே சென்ற போது, எதிரே வந்த மற்றொரு பைக் மோதியதில் பலத்த காயமடைந்த சுமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு பைக்கில் வந்த சங்கராபுரத்தை அடுத்துள்ள சிவபுரத்தைச் சோ்ந்த தெய்வீகன் மகன் கருணாகரன் காயமடைந்தாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.